இது ஒரு www.tntet2012.blogspot.com இன் துணை வலைபூ... வீட்டிற்கு செல் எனும் பொத்தானை அழுத்தி Home page க்கு செல்லுங்கள்.. வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்தும் ஒரே குடையின் கீழ்..  

Monday, October 29, 2012

Group 2 - இன்றைய விசாரணை விவரம்.

இன்று ( 29.10.2012 ) மதியம் விசாரணைக்கு வழக்கு வந்த போது நிர்மல் தரப்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிம் மேலும் 2 கேள்விகளுக்கான விடை தவறு என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதற்கு தேர்வாணையம் பதிலளிக்க வசதியாக வரும் புதன்கிழமை ( 31.10.2012 ) அன்று வழக்கை நீதிபதி தள்ளி வைத்துள்ளார். சில கேள்விகள் விபரம்:

1) வோல்ட் மீட்டரின் மிந்தடையின் அளவு அதிகம் ஏன் எனில் ...........
2) 2009-2010 பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது மாநிலமாக உள்ளது? 
3) கீழ்கண்டவற்றில் எது வெளிப்பாட்டுக் கருவி இல்லை?
4) எய்திய - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க. Etc

TNPSC'ன் வாதம் எடுபட வாய்ப்பு உள்ளதாகவும் அதனால் சாதகமாய் தீர்ப்பு வெகு விரைவில் வரலாம் என அனுபவ சாலிகளின் கணிப்பு கூறுகிறது.

COUNSELLING முடித்தவர்கள் மற்றும் NON-INTERVIEW POSTக்காக காத்திருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். கட்டாயம் தீர்ப்பு உங்களுக்குச் சாதகமாகவே அமையும்.

"இன்னும் கொஞ்சம் தாமதம் தான்" என நினைத்துக் கொள்ளுங்களேன்.

Sunday, October 28, 2012

சென்ற TNTET தேர்வில் தேர்ச்சி அடைந்த D.T.Ed ஆசிரியர்களுக்கு பதிவு மூப்பு பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியது


டி.இ.டி., முதல் தாளில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்கள், தற்போதுள்ள நடைமுறை விதிகளின்படி, வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு, தேர்வு செய்யப்பட உள்ளனர். 

 

எனவே, தேர்ச்சி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு பதிவை பதிவு செய்துள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில், இம்மாதம், 31ம் தேதி ஆஜராகி, வேலைவாய்ப்பு பதிவு அட்டையின், சான்றொப்பமிட்ட இரு நகல்களை, சமர்ப்பிக்க வேண்டும். 

 

சான்றிதழ் சரிபார்த்தலுக்காக அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தின் நகலையும், "ஹால் டிக்கெட்' நகலையும், எடுத்துச் செல்ல வேண்டும் என்று டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

 

சென்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்த இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி நியமனம் உறுதி ஆகிவிட்டது.

 

இந்த அக்டோபர் தேர்வில் தேர்ச்சி அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மீதமுள்ள 3500 பணி இடங்களை நிரப்புவதில் போட்டா போட்டி ஏற்படும் என்பது தெரிய வருகிறது.

 

மேலும் இன்னும் ஒரு சில வாரங்களில் அக்டோபர் 14 அன்று நடந்த ஆசிரியர் மறு தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்க படுகிறது.

 

 

Saturday, October 20, 2012

அக்டோபர் 7 அன்று நடத்தப்பட்ட TET answer key TRB ஆல் வெளியிடப்பட்டுள்ளது அது உங்களுக்காக single pdf format ல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது


SMS " ON tntet2012 " to 9870807070 புதிதாக உங்களுக்கான சேவை...

இந்த வலைபூ வேலைவாய்ப்பிற்கான ஒரு ஒருங்கிணைப்பு தளமாக செயல்பட்டுவருவதை நீங்கள் அறிவீர்கள்...

உங்கள் அலைபேசியில் இந்த தளத்தின் புது புது வெளியீடுகளை உடனுக்குடன் குறுந்தகவலாக பெற மற்றும் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற தற்போது தொடங்கப்பட்டுள்ளதே GOOGLE SMS சேவை

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்


உங்கள் மொபைலில் இருந்து " ON tntet2012 "  என்று 9870807070 என்ற எண்ணிற்கு ஒரு sms அனுப்புங்கள் பிறகு பெறுங்கள் உடனுக்குடனான குறுந்தகவல் சேவையை அதுவும் தினமும் இலவசமாக...

 தினமும் புதுப்புது செய்திகளும் உங்களுக்கு தேவையான தகவல்களும் இதில் இடம் பெறுவதாக நீங்கள் நினைப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

மிகக் குறைந்த காலத்திலேயே 3 மாதத்திலேயே... 60 ஆயிரம் பார்வையாளர்களை வெற்றிகரமாக இந்த தளம் பெற்றுள்ளது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

புதுமை - எளிமை - தனித்துவம் என்பதே இந்த தளத்தின் குறிக்கோள்

இனி வரும் காலங்களில் நீங்கள் பெரிதும் கவலைப்படும் இந்த தளத்தின் மின்னியல் புத்தகங்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யும் சேவை தொடங்கப்படும்


Wednesday, October 17, 2012

IBPS - வங்கி பணிக்கான பொது நுழைவுத் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 5


வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டம் - 9 ஆம் வகுப்பு தவறியவர்களுக்கும் வழங்க அரசு அனுமதி படிவம் பதிவிறக்கம் இங்கே

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இன்னும் வேலை கிடைக்காதவர்களுக்கு மாதம் அவர்களின் கல்வித் தகுதிக் கென குறிப்பிட்ட தொகையை உதவித் தொகையாக வழங்கி வருகிறது தமிழக அரசு.


தங்களின் செல்போனை ரீச்சார்ஐ் செய்யவாவது இந்த தொகை போதும் என்றுதான் பல மாணவர்களும் பட்டதாரிகளும் இந்த திட்டத்தில் தங்களை பதிந்து கொள்கின்றனர்.

பத்தாம் வகுப்பு பாஸ் தான் இதற்கான அடிப்படை கல்வித்தகுதியாக இருந்தது... இன்று செப்டம்பர் 17 - 2012 அன்று இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற 9 ஆம் வகுப்பு தேர்ச்சியே அடிப்படை தகுதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது..

முழுமையான விவரத்தினையும்... அதற்கான படிவத்தினையும் தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..


http://employmentexchange.tn.gov.in/Empower/pdf/Forms/FORM_4.pdf 

ரயில்வேயில் பல்வேறு மருத்துவ பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 12



 இந்திய ரயில்வேயில் மருத்துவத்துறையில்  பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..


விண்ணப்பங்களை தாங்கள் எழுத விரும்பும் பணிக்கான தேர்வு கட்டணங்கள் செலுத்தப்பட்ட அஞ்சலக பற்று சீட்டு அல்லது DD உடன் வழக்கமான முறையில் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்...

முழு தகவலை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

http://www.rrbthiruvananthapuram.net/(S(qtdhl32pox1ysxa3i5pzzjnz))/Admin/NotificationFiles/CEN05_2012-PARAMEDICALCATEGORIES.pdf

Tuesday, October 16, 2012

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 18ஆயிரத்து 932 பணியிடங்களும் நிரப்பப்படுவதில் சிக்கல் - புதிய வியூகத்தினை கையாள போகும் TRB...


ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக, 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும், 18 ஆயிரத்து 932 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. முந்தைய தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேருக்கான இடங்களைத் தவிர்த்து, மீதமுள்ள, 22 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு, இத்தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் நியமிக்கப்படுவர் என்று ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

 

இதில் தற்போது நடந்து முடிந்த அக்டோபர் TET தேர்வினில் முதல் தாளில் வினாக்கள் மிகவும் எளிமையாக அமைந்ததால் குறைந்தது 50,000 பேர் வரை தேர்ச்சி அடைவார்கள் என்று தெரிகிறது.

 

ஆனால் இந்த தேர்வில் முதல் தாளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி நியமனம் Seniority அடிப்படையில் நிரப்பப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதிப்பெண்ணும் கருத்தில் கொள்ளப்படும் என்ற இருநிலையான அறிவிப்புகள் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது.

 

இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனத்தில் Seniority பிரட்சனை என்றால்... பட்டதாரி ஆசிரியர் தேர்வில் சமூக அறிவியல் பாடம் தவிர்த்த மற்ற பாடங்களில் வினவப்பட்ட வினாக்கள் மிகவும் கடினமாகவே இருந்தன...

 

இது சென்ற சூலை மாதம் நடந்த TET தேர்வினை விட கடினமானது என்றே தேர்வர்களால் பாவிக்கப்பட்டது .

 

இந்த சூழலில் தேவையான 18,932 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் அளவு ஆசிரியர்கள் தேர்வாகாத சூழலில் 5 சதவிகித மதிப்பெண்ணை குறைத்து .. அதாவது தேர்ச்சி மதிப்பெண்ணை 82.5 சதவிகிதமாக குறைத்து மேற்கொள்ள TRB முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

 

 

சென்ற தேர்விலேயே 750 பேர்தான் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தேர்வானார்கள்... அதை விட கடினமான வினா வினவப்பட்ட இந்த தேர்வில் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைபவர்கள் எண்ணிக்கை 2000 ஐ தாண்டாது என்றுதான் தோன்றுகிறது.

 

 

மீண்டும் மறுத் தேர்வு நடத்த TRB ஆல் முடியாது என்பதாலும் அறிவிக்கப்பட்ட பணி நியமனத்தினை வழங்க ஆவண உடனடியாக செய்ய வேண்டும் என்பதாலும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வாணையம் சில நெகிழ்வு சுளிவுகளை மேற்கொண்டாகும் என்பது இதன் மூலம் உறுதி...

 

 

எது எப்படியே... இந்த முறை அறிவிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்பியே ஆக வேண்டும் என்பது ஆசிரியர் தேர்வாணையத்தின் விதி... 

 

 

  

TRB ஆல் வெளியிடப்பட்டுள்ள அக்டோபர் TNTET 2012 விடைகள் இங்கே...

Sunday, October 14, 2012

TNTET Supplementary Exam - கை கொடுத்த முதல் தாள் கை நழுவிய இரண்டாம் தாள்... தேர்வு எழுதியோர் ஆதங்கம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2012 - க்கான மறுத் தேர்வு இன்று 14 அக்டோபர் 2012 அன்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பாக நடந்து முடிந்தது.

முதல் தாள் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை வினாக்கள் வினவப்பட்டதாலும் எளிமையான வினாக்களாலும் அருமையாக இருந்தது.


குறைந்தது 50 ஆயிரம் பேராவது முதல் தாளில் தேர்ச்சி அடைந்துவிடுவார்கள் என்று செவிவழி செய்திகள் தெரிவிக்கின்றன.


ஆனால் இரண்டாம் தாள் அறிவியல் மற்றும் கணிதவியலை தேர்ந்தெடுத்தவர்களுக்கு போதாத காலம்  என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாம் தாளில் தமிழ் முழுவதும் கை கொடுக்காத நிலையில் உளவியலும் சற்று கடினமான வினாக்களாகவே அமைந்ததாக இருந்தது.

ஆங்கிலத்தினை பொருத்தவரை சற்று எளிமையாக இருந்தாலும் அறிவியலில் வினவப்பட்ட துறைசார்ந்த நுண் அறிவை சோதிக்கும் விதமான கேள்விகளும் கணிதத்தில் 10 வினாக்களுக்கு மிகவும் கடினமாக இருந்ததும் பெருத்த சலிப்பினையும் தேர்வின் மீது வெறுப்பினையும் தேர்வர்களின் மீது தேர்வு எழுதியவர்களால் ஏற்பட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

Wednesday, October 10, 2012

TET - Hallticket கிடைக்க பெறாதவர்கள் செய்ய வேண்டியது என்ன?

வரும் அக்டோபர் 14 ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.

அதற்கான நுழைவு சீட்டு பழைய விண்ணப்பதார்களுக்கு வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதிய விண்ணப்பதார்களும்... தங்களுக்கு நுழைவுச்சீட்டு கிடைக்க பெறாத பழைய விண்ணப்பதார்களும் செய்ய வேண்டியது இதுதான்

கீழே உங்களின் நிலைக்கேற்ப லிங்குகளை கிளிக் செய்யுங்கள்..

 பழைய விண்ணப்பதார்கள் இங்கே சொடுக்கவும்...

புதிய விண்ணப்பதாரர்கள் இங்கே சொடுக்கவும்

பின்னர் தங்களின் பழைய தேர்வு எண்ணையோ... புதிதாக விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணையோ கொண்டு தங்களின் புதிய தேர்வு எண் மற்றும் தேர்விற்கான இடம் நேரம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்ய ctrl+P அழுத்தி A4 தாளில் print out எடுத்துக் கொள்ளவும்..

பிறகு வலது மூலையில் தங்களின் ஒரு புகைப்படத்தினை ஒட்டி அதில் gazetted officer ஒருவரிடம் புகைப்படத்தினை ஒட்டியவாறு கையொப்பம் பெற்றுக்கொள்ளவும்..

தேர்வு நாளன்று கையோடு இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தினையும் இந்த Hallticket ஐயும் உடன் தங்களின் அடையான அட்டை ஒன்றிணையும் எடுத்துச் செல்லவும்... அவ்வளவுதான்..


அடையாள அட்டைக்காக குடும்ப அட்டை யை தவிர்த்து தனிநபர் அடையாள அட்டைகளை எடுத்துச் செல்லவும்...

நன்றாக தேர்வு எழுத வாழ்த்துக்கள்..

இப்படிக்கு உங்களில் ஒருவனாக Jaganathan. R   

Monday, October 8, 2012

ஆசிரியர் பணி நியமனத்தில் புதிய முறை அறிமுகம் - மார்க் வெயிட்டேஐ் முறையில் பணி நியமனம் செய்யப்படும்


GROUP 4 தேர்வு முடிவுகள் வெளியீடு - நான் தேர்வாகிவிட்டேன்...

http://www.tnpsc.gov.in/results/grp42012_seldoc.pdf



கடந்த சூலை மாதம் 7 ஆம் தேதி நடந்த group 4 தேர்வில் டைப்பிங் பிரிவில் 128/200 பெற்று நான் தட்டச்சர் பணிக்கு தேர்வாகி உள்ளேன்.

இதனை இந்த தளத்தின் பார்வையாளர்களாக உள்ள தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

எனது இந்த வெற்றி என் 3 வருட உழைப்பிற்கு கிட்டிய பலன் என்றுதான் சொல்ல வேண்டும்.

மனம் போல் மார்கம் என்பது இதன் மூலம் நான் அறிந்து கொண்டேன்..

Saturday, October 6, 2012

PG TRB மறு மதிப்பீட்டீற்கான முழு சட்ட அறிக்கை


TET + TNPSC மின்னியல் புத்தகங்கள் இலவசம்



இலவசம்...இலவசம்... இலவசம்... மின்னியல் புத்தகங்களை இந்த தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய கட்டணம் ஏதும் இல்லை..5 நொடிகள் காத்திருந்தாலே போதும்...இதில் இடம் பெறும் விளம்பர பக்கம் ஒரு சோதனைக்காகவே இணைக்கப்பட்டுள்ளது ... தவறாக நினைக்க வேண்டாம்...
அக்டோபர் 3 ஆம் தேதி TET மறுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது... மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை... தேர்வு நேரம் ஒன்னறை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது...இந்ததளத்தில் கிடைக்கும் மின்னியல் புத்தகங்களையும் பயன்படுத்தி தயாராகுங்கள்... பாடபுத்தகங்களை முழுவதுமாக படியுங்கள் வெற்றி நிச்சயம்...


மின்னியல் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்குகளை சொடுக்கவும் >>>> அது உங்களை அழைத்து செல்லும் வலைபக்கத்திற்கு சென்று 5 விநாடிகள் காத்திருந்து skip add என்பதை சொடுக்கவும் >>>> பிறகு அது அழைத்து செல்லும் புத்தக களஞ்சிய பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் புத்தகத்தினை பார்வையிட்டு facebook log-in செய்வதன் மூலமாக புத்தகங்களை எளிமையாக download செய்துக் கொள்ளலாம்...

ஆன்லைனில் வருமானம் பெறுவது எப்படி?

கட்டணம் ஏதேனும் கேட்டால் உங்கள் கணினியில் உள்ள ஒரு file ( கோப்பினை ) பதிவேற்றம் செய்வதன் மூலமாக Scribd தளத்தின் உறுப்பினராக பின் இந்த புத்தகங்களை கட்டணம் இன்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த புத்தகங்களை பதிவிறக்கம் செய்வதில் தாங்கள் ஏதேனும் பிரட்சனையினை உணர்ந்தால் கிழ் காணும் லிங்கினை கிளிக் செய்து முழு விவரத்தினையும்... உதவியினையும் அடையுங்கள்..


இந்த புத்தகங்களை எளிமையாக பதிவிறக்கம் செய்வது எப்படி என்ற உதவிக்கு இங்கே கிளிக் செய்யவும்..


 ஒரு முழு புத்தகம்

புதிய தலைமுறைக் கல்வி

 பொதுவான புத்தகங்கள்

 அறிவியல் பாடக்குறிப்புகள் முழுமையும்

  சமச்சீர் கல்வி பழைய பாட புத்தகங்கள் ( முழு பாட புத்தகங்கள் ) Pulpit rock

குழந்தை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு உளவியல் பாடக்குறிப்புகள்

 Govt Model Question Paper with answer

 கணிதம் பாடக்குறிப்புகள் களஞ்சியம்

 ஆங்கிலம் பாடக்குறிப்புகள் களஞ்சியம்

 தமிழ் பாடக்குறிப்புகள் முழுமையும்

  தமிழ் மின்னியல் புத்தகங்கள்... Pulpit rock

தமிழ் இலக்கணம்... Pulpit rock

ஆங்கில இலக்கணத்தினை தமிழில் கற்க சிறந்த மின்னில் புத்தகம்...புதிது Pulpit rock
தமிழ்நாடு பாடநூல்கள் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை Pulpit rock

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வினா விடைகள் Pulpit rock

தினகரனில் வெளியான பதிவுகள் முழுமையும்

  டி.என்.பி.எஸ்.சி சார்ந்த கற்றல் கட்டுகள்

 குடிமையியல் mp3 பதிப்பு

 தமிழ் நூல்களும் அதன் ஆசிரியர்களும் mp3 பதிப்பு

 அறிவியல் mp3 பதிப்பு

  தமிழ் mp3 பதிப்பு

 மேலும் மின்னியல் புத்தகங்களை சுருங்கிய வடிவில் பெற என்னை https://www.facebook.com/jackn.nath எனும் இந்த முகபுத்தக பக்கத்தில் தொடர்பு கொள்ளவும். மேலும் என் மின் அஞ்சல் முகவரி jagan.nathan801@gmail.com Open a popup window Guestbook

Friday, October 5, 2012

பத்தாம் வகுப்பு தவறியவர்களுக்கு தட்கல் முறையில் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 8


அகவிலைப்படி 7 சதவிகிதம் உயர்வு - தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி




கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவிகிதம் உயர்த்தி வழங்க வெளியான தகவலை தொடர்ந்து மாநில அரசும் தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை அறிவித்துக்ளது.

இதன்படி, 



தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள்  ‌பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை 1-ம் (1.7.2012)தேதி முதல் கணக்கீட்டு ரொக்கமாக வழங்கப்படும். 

இந்த அகவிலைப்படி உயர்வினால் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பன்பெறுவர்.

 இதன் மூலம் அரசுக்கு ரூ. 1,443. 52 கோடி செலவாகும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...  

Thursday, October 4, 2012

B.Ed மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகள் வெளியீடு


TNPSC GROUP 4 தேர்வு முடிவுகளில் விரைவில் வெளியாகின்றன...

Group 4 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஏற்பட்டிருந்த நீதிமன்ற சிக்கல்களும் - இடைக்கால தடையும் நீக்கப்பட்டு விட்டதால்...

Group 4 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட TNPSC வட்டாரம் முடிவு செய்துள்ளது.

ஓரிரு நாட்களில் முடிவுகளை எதிர்பார்க்கலாம். 

Wednesday, October 3, 2012

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் சிக்கல் - மறு மதிப்பெண் பட்டியல் தயாரிக்க நீதிமன்றம் உத்திரவு.


ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ள, தேர்வு பெற்றவர் பட்டியலும், இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது. புதிய மதிப்பெண் பட்டியலோடு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை, மூன்று வாரத்திற்குள் வெளியிட வேண்டும் என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், 2,395 முதுகலை ஆசிரியர் பட்டதாரி பணியிடங்களை நிரப்ப, பிப்ரவரி, 28ம் தேதி, அறிவிப்பு வெளியிட்டது. இத்தேர்வில், முதன்மை பாடம், கல்வி முறை மற்றும் பொது அறிவு ஆகியவற்றில் இருந்து, 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில், கொள்குறி வினாக்களுக்கு, கொடுக்கப்பட்ட பதில், முற்றிலும் தவறாக இடம் பெற்றது. தேர்வாணையம் வெளியிட்ட, தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில், தேர்விலேயே முதல் மதிப்பெண் பெற்றவர்களை, பொதுப்பிரிவில் சேர்க்காமல், அவர்களின் சாதி அடிப்படையிலான பிரிவில் சேர்த்துள்ளனர். இதனால், இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாதது தெரியவந்தது. இதையடுத்து, தேர்வு எழுதியவர்களில் சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி நாகமுத்து அளித்த தீர்ப்பு: பொதுப் பிரிவுக்கான தேர்வு முடிவுகளை, வாரியம் முறையாக பின்பற்றவில்லை. கேள்வித்தாளில் இடம் பெற்ற, வினாக்களுக்கான பதில், முற்றிலும் தவறானதாக இருந்ததால், மாணவர்கள் மதிப்பெண் பெறுவதும் தடைபட்டு உள்ளது. எனவே, தேர்வாணையத்தின் தேர்வு பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. மூன்று வாரத்திற்குள், புதிய மதிப்பெண் பட்டியலோடு, தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த விவரங்களை, தேர்வாணையம் வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான, "கீ ஆன்சர்' தவறு என்று, ஐகோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் குறித்து, மறு மதிப்பீடு செய்து, பிரச்னைக்குரிய விடைகளை இறுதி செய்து, இணையதளத்தில் வெளியிடப்படும். ஏற்கனவே ஒரு பணியிடத்திற்கு ஒருவர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும். இதற்கு அழைக்கப்படுபவரின் பட்டியலும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியிடங்கள் - கடைசிநாள் அக்டோபர் 10


Friday, September 21, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அக்டோபர் 14 க்கு மாற்றம்...புதிதாக விண்ணப்பிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்..

அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி.மறுதேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

சென்னை ஐகோர்டில் சூளையைச் சேர்ந்த யாமினிதிருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயராஜ் ஆகியோர்தனித் தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். யாமினி தனது மனுவில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பைதமிழக அரசு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. கடந்த ஜூலை, 12ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. அதில், 6 லட்சத்து76 ஆயிரத்து 763 ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வில், 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருந்ததால்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் வரும் அக்டோபர் 3ம் தேதி மறுபடியும் தேர்வு எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்கடந்த ஆகஸ்ட், 26ம் தேதி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். கடந்த ஜூலை மாதத்துக்கு பின்என்னைப் போல் ஆயிரக்கணக்கானோர் புதிதாக பி.எட்.படித்து காத்திருக்கிறோம். எனவேஎங்களுக்கு இந்தத் தேர்வை எழுத தகுதி உண்டு. என்னைப் போல் புதிதாக பி.எட்.படித்தவர்களையும் தேர்வெழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுக்கள் நேற்று நீதிபதி நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. அப்போதுஅரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த பாண்டியன் ஆஜராகிசில வாதங்களை முன் வைத்தார்.

அவை வருமாறு: இந்த கோரிக்கை குறித்து அரசு பரிசீலனை செய்தது. ஜூலைக்குப் பின் பி.எட்.,முடித்தவர்களையும் இத்தேர்வில் அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே,இதுவரை விண்ணப்பிக்காதவர்களும்புதிதாக பி.எட்.படித்தவர்களும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 3ம் தேதி நடக்க இருந்த தகுதித் தேர்வைஅக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றியுள்ளோம். மனுதாரர் விஜயராஜின் கோரிக்கை தொடர்பாகஅமைச்சர் தலைமையில்நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்திபரிந்துரைகளை குழு அளிக்கும். அந்த பரிந்துரைகளை அரசு அமல்படுத்தும். இவ்வாறு அரவிந்த பாண்டியன் வாதிட்டார்.

இதைத் தொடர்ந்துநீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு வருமாறு: இப்பிரச்னையில் அரசு நல்ல முடிவை எடுத்துள்ளது. கடந்த தேர்வில் விண்ணப்பிக்காதவர்களும் இத்தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை அளிக்க அனுமதிக்க வேண்டும். இதுகுறித்துவிளம்பரங்கள் செய்ய வேண்டும். ஏற்கனவே தேர்வில் தோல்வி அடைந்தவர்கள்மீண்டும் தேர்வு எழுத புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் "ஹால் டிக்கெட்'டை அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தேர்வரின் கோரிக்கையை பரிசீலனை செய்துடி.இ.டி.தேர்வுக்குபுதிய தேர்வர்களும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதனால்அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி.மறுதேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. புதிய தேர்வர்களுக்காக, 24ம் தேதி காலை, 10 மணி முதல், 28ம் தேதி மாலை, 5:30 மணி வரைஅனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில்விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஜூலையில் நடந்த டி.இ.டி.தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள்மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது. இவர்களுக்குள்ளதேர்வு மையத்தில்எவ்வித மாற்றமும் கிடையாது. புதியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்துசம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலேயே வழங்க வேண்டும். நேரிடையாகடி.ஆர்.பி.அலுவலகத்திற்கு அனுப்பக் கூடாது.

புதிதாக விண்ணப்பிப்பவர்கள்பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றை நகல் எடுத்துநகலில் முதன்மை கல்வி அலுவலரின் கையெழுத்தை,தேதியுடன் பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த பின்விண்ணப்பத்தில்எவ்வித மாற்றமும் செய்ய முடியாது. ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர்மொழிப் பாடத்தை மாற்ற விரும்பினால், 28ம் தேதிக்குள்டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்கலாம். புதிய தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு, "ஹால் டிக்கெட்அனுப்பப்பட மாட்டாது. டி.ஆர்.பி.இணையதளத்தில் இருந்து, "ஹால் டிக்கெட்'டைபதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு டி.ஆர்.பி.தெரிவித்துள்ளது. பழைய தேர்வர்களுக்குஏற்கனவே டி.ஆர்.பி.இணையதளத்தில், "ஹால் டிக்கெட்'வெளியிடப்பட்டுள்ளது. புதிய தேர்வர்களுக்குஅக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
 


நன்றி...http://www.teachertn.com/2012/09/tn-tet-14.html 

Sunday, September 16, 2012

PAYPAL பற்றிய சில தகவல்கள்...


<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பேபால் என்றால் என்ன?(What is paypal)பேபால் என்றால் என்ன?(What is paypal)

இது ஒரு இணையத்தள வங்கி. இத்தளத்தின் மூலம் பணத்தை எடு க்கலாம். பணத்தை மற்றவர் கண க்குகளில் போடலாம். ஒரு வங்கி க் கணக்கிலிருந்து மற்றொரு வங் கிக் கணக்கிற்கு பணத்தை பரிமா ற்றம் செய்யலாம். இணையதளங் களின் மூலம் வாங்கும் பொருட்க ளுக்குரிய பணத்தை இத்தளத்தின் மூலம் செலுத்தலாம்.

நீங்கள் இணையத்தின் மூலம் ஒரு பொருளை விற்ககூட இந்த கணக்கை நீங்கள் பயன்படுத்திக் கொள் ளலாம். முந்தைய கால Cheque, Demand draft, Money order போ ன்ற முறைகளுக்கு ஒரு மாற்றாக இணையத்தில் அமைந்த ஒரு Digital முறையில் பணப்பட்டுவாடா செய்ய பயன்படும் E-commerce நிறுவ னமே paypal.

Paypal நிறுவனத்தின் தொடக்கம் (beginning of Paypal company):

Paypal நிறுவனம் 2000ம் ஆண் டில்தான் நிறுவபட்டது. இந்நிறு வனம் 2002ம் வருடம் E-Bay நிறுவனத்தின் துணை நிறுவன மாக Subsidiary மாறிற்று. இணைய மோசடிகளை Inter net Frauds தடுக்கும் வகையில் 2008ம் ஆண்டு ப்ராடு சயன்சஸ் என்னும் நிறுவனத்தை தன்னுட ன் இணைத்துக் கொண்டு பலம் பெற்றது. இன்றுவரை பேபால் நிறுவனம் 15 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து 200 க்கும் மேற்பட்ட சந்தைகளில் இணைந்து தன்னுடைய வர்த்தகத்தை தொ டர்ந்து பாதுகாப்பாக செய்து வருகிறது.

200 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைப் பெற்றுள் ளது. Paypal பத்தொன்பதுக்கு ம் மேற்பட்ட currencyயில் கணக்கை வைத்துக்கொள் ளும் வசதியை கொண்டிருக் கிறது. (அதாவது இந்தியாவி ன் rupee, அமெரிக்காவின் dollar போன்று).

ஒரு நாட்டு கரன்சி மதிப்பிலி ருந்து மற்றொரு நாட்டி
கான கரன்சி மதிப்பிற்கு மாற்றி பணத்தை நமது கணக்கில் பணத்தைச் சேர்க்கும் வசதியைப்பெற்றிருப்பதே பேபாலின் முக்கியமான பயனா கும். மிகச் சிறப்பான பாதுகாப்பு வசதியை இது அளிக்கிறது. இந் நிறு வனத்தில் Security key இதற்கு ஒரு சரியான உதாரணம் ஆகும்
விரைவாக, மிக எளிமையாவு ம் பணத்தை இணையத்தளம் வழியாக பணம் பரிவர்த்தனை அல்லது பணப்பரிமாற்றம் செய் வதில் இத்தளம் முதலிடம் வகி க்கிறது. தற்போது சில தளங்க ள் இணைய பணபரிவர்த்தனை வசதிகளைக் கொடுத்தாலும், Paypal நிறுவனத்திற்கு ஈடாக எதுவும் இன்னும் வரவில்லை. துல் லியம், பாதுகாப்பு, பயன்பாட்டில் எளிமை ஆகிய விஷயங்களில் Pay pal-க்கு Paypal தான். இந்நிறுவனம் தனது சேவைக்காக பல்வேறு விருதுகளைப்பெற்றுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த Paypal நிறு வனம் கலிபோர்னியா மாகாணத்தில் அமை ந்துள்ளது.

Paypal மூலம் பணத்தை செ லுத்தும் முறை:

பேபால் மூலம் நீங்கள் பணத் தைச் செலுத்த உங்களிடம் கிர டிட் கார்ட், Internet banking வசதி கொண்ட வங்கிக் கண க்கு, டெபிட் கார்ட்(Debit Card) போன்ற ஏதேனும் ஒன்று இரு க்க வேண்டும். இதன்மூலம் நீங்கள் பேபால் கணக்கில் பணத்தைச் செலுத்த முடியும். சில நாடுகளிலிருந்து வங்கி காசோ லை மூலம் கூட பேபால் மூலம் பணத்தை செலுத்த முடியும்.

Paypal மூலம் பணத்தை பெறும் முறை (Receive money through Paypal system):
Paypal மூலம் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றவும் முடியும். உங்களுக்கு பேபால் வழி யாக உங்கள் வாடிக்கையாளரோ , உறவினரோ, நண்பரோ வெளிநாட் டிலிருந்து பணத்தை பரிமாறிக் கொள்ள முடியும். உங்கள் பேபால் கணக்கில் பணம் சேர்ந்தவுடன் அதை உங்கள் வங்கிக்கணக்கிற்கு மாற்றி நீங்கள் எடுத்துக்கொள்ள லாம்.
இவ்வாறு பண பரிமாற்றம், பண பரிவர்த்தனைகளுக்கு பேபால் நிறு வனம் ஒரு சிறு தொகையை கமிசனாக பெற்றுக்கொள்கிறது.
ஒரு பேபால் கணக்கை துவங்குவது எப்படி? (How to start a PayPal account?)
Paypal Account தொடங்குவது மிக எளிதா ன ஒன்று தான். உங்களிடம் முறையான வங்கிக் கணக்கு ஒன்று இருக்க வேண்டும்.
உங்கள் வங்கிக் கணக்கிற்கான Credit Card, அல்லது Debit Card வைத்திருக்கவேண்டும்
கூடவே இந்திய அரசு வழங்கும் Pan Card-ம் அவசியமாக வைத்தி ருக்க வேண்டும்.
பேபால் கணக்குத்துவங்க Paypal.com என்ற முகவரிக்கு செல்லவும். அதில் signup என்பதை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் பக்கதில் தேவை யான விபரங்களைக் கொடு க்கவும். select your country and region from the list என்பதில் உங்களுடைய நாட்டை தேர்ந்தெடுக்க வும்.
அடுத்து உங்களுக்கு தேவையான கண க்கு முறையைத் தேர்ந்தெடுக்கவும். நீங் கள் இணையத்தில் மூலம் பொருட்க ளை விற்பவர் எனில் business Account -ஐத் தேர்ந்தெடுக்கவும். சாதாரணமாக பண பரிவர்த்தனை மட்டுமே என்றால் personal என்பதைத் தேர்ந்தெடுக்கலாம் .

இணையதளத்தில் வர்த்தகம் செய்ய விரும்பினால்
கட்டாயம் Busines or Permium வகைக் கணக்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பிறகு தேவையான உங்களு டைய தகவல்களை படிவத்தி ல் நிரப்புங்கள். நீங்கள் நிரப் பும் உங்களுடைய சொந்த தகவல்கள் உண்மையாகவும் , வங்கி கணக்கில் உள்ள விப ரங்களுடன் ஒத்துப் போகிற மாதிரியும் இருக்க வேண்டும். இது மிக முக்கியமானதொன் று. குறிப்பாக சொல்வதெனி ல் உங்களுடைய பெயரின் எழுத்துகள்(Name Letters), இனிஷியல் (Initial), தொலைபேசி (cell number, phone number)எண் மற்றும் Email address ஆகியவை மிகச்
சரியாக எழுத்துப் பிழை இல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இணையத்தின் மூலம் அதிக பண பரி வர்த்தனை(Money Exchange), பண பரிமாற்றம் (Money transfer) செய்யு ம் நபர்கள் தங்களுடைய கடன் அட் டை விபரங்களையும் (Credit Card Details) கொடுக்க வேண்டியது கட் டாயம். இத்தளம் மிகச்சிறந்த பாது காப்பை அளிப்பதால் நம்பி விபரங்க ளைக் கொடுக்கலாம்.

அனைத்து விபரங்களையும் கொடு த்த பிறகு உங்களு paypal அக்கவுண்ட் தொடங்குவது உறுதிசெய்வ தற்கான மின்னஞ்சல் வந்த டையும். அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்து உங்கள் கணக்கு விபரங்க ளை நீங்கள் உறுதிப்படுத்தலாம்.

Paypal மூலம் பணம் எடுப்பது எப்படி ?

Paypal மூலம் பணம் எடுக்க முறை யே மூன்று வழிகள் உள்ளன. இது நாட்டிற்கு நாடு மாறுபடும். உங்களு டைய வங்கிக்கணக்கு விபரங்க ளை கொடுத்து, withdraw option தேர்ந்தெடுத்தால் போதும். உங்கள் வங்கிக் கணக்கிற்கு பேபாலிலி ருந்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும்.
ஒரு சில நாடுகளில் cheque, debit card, credit card மூலமாகவும் பணம் எடுப்பதற்கான வசதிகளைக் கொடுத்திருக்கின்றனர். அதிகபட்ச மாக ஐந்து நாட்களுக்குள் இந்த பண ப்பட்டுவாடா முடிந்துவிடும். ஒரு பே பால் கணக்கிலிருந்து மற்றொரு பே பால் கணக்கிற்கும் பணப்பரிவர்த்த னை செய்யமுடியும். personal Paypal Accountமூலம் பணபரிமாற்றம் செய் ய குறைந்த அளவே கமிஷனாக கட் டம் பெறப்படுகிறது.

பேபால் கணக்கின் முக்கிய பயன் கள் (The main benefits of the PayPal account):
பேபால் கணக்கின் மூலம் நீங்கள் இணையத்தின் மூலம் உலகில் எந்த மூலையிலிருந்து, வேண்டிய வருக்கு பணத்தை அனுப்ப முடியு ம். அதோபோல எங்கிருந்தும் பண த்தை நாம் பெற்றுக்கொள்ள முடி யும். இணையதளத்தின் மூலம் நீங்கள் பொருட்களை வாங்கும் போது மிகப் பாதுகாப்பாக உங்கள் பணத்தை இந்த தளத்தின் மூலம் செலுத்த முடியும்.

எப்படி எனப் பார்ப்போம்.

நீங்கள் இணையம் மூலம் பொருட்களை வாங்கும்போது விற்பனை யாளர்களுக்கு(Dealer) நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கைப் பற்றி விபரங்களைக் கொடுக்க வேண்டியதில்லை. credit card number, Bank account number, போன்ற அதி முக்கியத் தகவல்களை விற் பனையாளருக்கோ, அத்தளத்திற்கோ கொடுக்க வேண்டிய அவசிய மேற்படாது. இதனால் உங்கள் தகவல்கள் பாதுகாக்கப்படுகிறது. உங்களுடைய pers onal data பாதுகாக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் money transaction மிகப் பாதுகாப்பாக நடைபெறுகிறது. எனவே எதற்கும் நாம் பயபட வேண்டிய அவசியமி ல்லாமல் போகிற து.

இனி என்ன ? நீங்களும் உங்களுக்கான பே பால் அக்கவுண்ட்டை கிரியேட் செய்து கொள்ள வேண்டியதுதானே?


பேபால் அக்கவுண்ட் கிரியேட்(தொடங்க) செய்ய www.paypal.com செல்லவும்.

நன்றி - தங்கம்பழனி

நன்றி... https://www.facebook.com/photo.php?fbid=478801745492781&set=a.198320656874226.47263.100000888786399&type=1

TET EXAM - என்னதான் கேட்பாங்க கேள்விகளாக... ஒரு முழு அரசாங்க ஆவண விவரம்










Wednesday, September 12, 2012

ரத்து செய்யப்பட்ட Group 2 தேர்வு மீண்டும் வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி

வினாத்தாள் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்ட குருப் 2 தேர்வு தேதி வரும் நவம்பர் மாதம் 4 என தெரிவி்க்கப்பட்டுள்ளது.

Friday, September 7, 2012

PAN CARD ஆப்ளை செய்வது எப்படி?




உங்களின் பான் கார்ட் கரெக்டாக உள்ளதா - திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா? அல்லது தொலைந்து விட்டதா - இல்லை அப்ளை செய்ய வேண்டுமா - 

இதோ சிம்பிள் வழிகள்........

உங்களுக்கு பேன் கார்ட் இருக்கிறது / இல்லை தவறாக இருக்கிறது / இருந்தது ஆனால் இப்போது தொலைந்து விட்டது என்றால் முதலில் உங்கள் முதல் பெயர், கடைசி பெயர், பிறந்த தேதி வைத்து உங்களுடைய கார்ட் அப்டேட் ஸ்ட்டேட்டஸ் முதலில் தெரிந்து கொள்ளுங்கள் இதொ
 அதன் லிங்க்.........https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do

புதிதாக விண்ணபிக்க விரும்புபவர்கள் / திறுத்தம் செய்ய விரும்புவர்கள் இங்கே உள்ள பிடிஎஃப் பாரத்தை டவுன்லோட் செய்து இதை ஏ4 பேப்பரில் நிரப்பி உங்களுடைய புகைப்படத்தோடு இந்த இரு சர்வீஸ் கம்பெனிகளில் ஏதேனும் ஒன்றில் அப்ளை செய்தால் 15 - 21 நாளுக்குள் உங்கள் கார்ட் வீடு தேடி வரும்.

1. NSDL - : https://tin.tin.nsdl.com/pan/form49A.html

2. UTITSL - : http://www.utitsl.co.in/pan

Application Form - :http://www.utiitsl.com/forms/Forms%2049A.pdf

அப்ளை செய்து ஏழு வேலை நாட்களுக்கு பிறகு இந்த லின்க்கில் உங்களுடைய புது கார்ட் ஸ்டேட்டஸ் பற்றி தெரிய வரும்.

https://tin.tin.nsdl.com/pan/changemode.html

http://www.myutiitsl.com/PANONLINE/panTracker.do

அப்ளிகேஷனை ஃபில் செய்யும் முறை -https://tin.tin.nsdl.com/pan/InstructionsCorr.html#instruct_corr



THANKS TO ஆந்தை ரிப்போர்டர்.. https://www.facebook.com/nagravi1 

Monday, September 3, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு - நீங்களும் எழுதுங்கள் உங்கள் பாடக்குறிப்புகளை உலகம் அறிய...


தன்னலம் தான் மனிதனின் முதல் எதிரி...

ஓர் ஆசிரியர் என்பவர் தன்னலம் இன்றி செயல்படுவராக இருக்க வேண்டும்...

ஆசிரியர் தகுதித் தேர்வில் வினாக்களாக வினவப்படலாம் என்று தாங்கள் நினைக்கும் வினா விடைகளை கீழ் காணும் ஒவ்வொரு பதிவுகளிலும் நீங்களே தட்டச்சு செய்து சேமிக்கலாம்...


நீங்கள் நான்... என்று யார் வேண்டுமானாலும் இதனை செய்யலாம்...

விளைவு ... ஒரு முழுமையான புத்தகமாக இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்...

தன்னலம் இன்றி செயல்படுங்கள்... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை...

Sunday, September 2, 2012

TNPSC தேர்வில் புதிய முறை அறிமுகம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்வாணையத் தலைவர்
நட்ராஜ் தெரிவித்தார். 

 
சென்னை சைதாப்பேட்டை ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் நடைபெற்ற நூலகர் தேர்வை நடராஜ் இன்று பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன் லைன் மூலம் கேள்வித்தாள்களை அனுப்பும் முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.

கேள்வித்தாள்களை ஆன்லைன் மூலம் அனுப்பும் முறையால் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என அவர் கூறினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நட்ராஜ் தெரிவித்தார்.

Friday, August 31, 2012

வேலைவாய்ப்பு பதிவு தளம் மாற்றம்..http://employmentexchange.tn.gov.in/Empower/

ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான B.Ed படிப்பிற்கான மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று சனிக்கிழமை 01-09-2012 அன்று சென்னையில் வழங்கப்பட்டது

இதனை தொடர்ந்து அந்தந்த கல்வியியல் கல்லூரிகளில் மதிப்பெண் சான்றிதழ்களை அளிக்க கல்லூரி நிர்வாகங்கள் ஏற்பாடு செய்துள்ளன...


ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் நாளே பதிவு மூப்பு நாளாக கொள்ளப்படும் என்பதால் ( சனி , ஞாயிறு என விடுமுறை நாட்கள் கணக்கில் கொள்ளப்படுவது இல்லை) இன்றே மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கி http://employmentexchange.tn.gov.in/Empower/ எனும் வேலைவாய்ப்பு இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளவும் என தினத்தந்தி செய்திதாளில் செய்தி வெளியாகி இருந்தது....

இதனை தொடர்ந்து அந்தந்த கல்வி நிலையங்களில் மதிப்பெண் சான்றிதழை பெற்ற B.Ed பட்டதாரிகள் ஆன்லைனில் தங்களின் கல்வி தரத்தினை இணைக்க முயன்றதால் செப்டம்பர் 01 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணி முதல்  தற்போது  வரை வேலைவாய்ப்பு பதிவு தளம் முடங்கி உள்ளது

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பினருக்கு அளிப்பது போல் ஒரு வார காலம் கால நீடிப்பு செய்து ஒரே நாளில் Seniority வரும்படி செய்ய வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது


கீழ்காணும் தளம் இயங்குகிறது.

http://employmentexchange.tn.gov.in/Empower/ 

Wednesday, August 29, 2012

பாரதியார் பல்கலைக்கழகம் SET ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 7 வரை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது...

கடந்த வாரம் 4 நாட்களாக ஆன்லைனில் பதிவு செய்ய முதுகலை பட்டதாரிகள் தடுமாறிய நிலையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 30 என்பதிலிருந்து செப்டம்பர் 7 ஆம் தேதி என கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது...

மேலும் அஞ்சல் மூலமாக விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் செப்டம்பர் 14

ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே சொடுக்கவும்...