இது ஒரு www.tntet2012.blogspot.com இன் துணை வலைபூ... வீட்டிற்கு செல் எனும் பொத்தானை அழுத்தி Home page க்கு செல்லுங்கள்.. வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்தும் ஒரே குடையின் கீழ்..  

Friday, September 21, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அக்டோபர் 14 க்கு மாற்றம்...புதிதாக விண்ணப்பிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்..

அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி.மறுதேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

சென்னை ஐகோர்டில் சூளையைச் சேர்ந்த யாமினிதிருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயராஜ் ஆகியோர்தனித் தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். யாமினி தனது மனுவில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பைதமிழக அரசு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. கடந்த ஜூலை, 12ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. அதில், 6 லட்சத்து76 ஆயிரத்து 763 ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வில், 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருந்ததால்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் வரும் அக்டோபர் 3ம் தேதி மறுபடியும் தேர்வு எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்கடந்த ஆகஸ்ட், 26ம் தேதி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். கடந்த ஜூலை மாதத்துக்கு பின்என்னைப் போல் ஆயிரக்கணக்கானோர் புதிதாக பி.எட்.படித்து காத்திருக்கிறோம். எனவேஎங்களுக்கு இந்தத் தேர்வை எழுத தகுதி உண்டு. என்னைப் போல் புதிதாக பி.எட்.படித்தவர்களையும் தேர்வெழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுக்கள் நேற்று நீதிபதி நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. அப்போதுஅரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த பாண்டியன் ஆஜராகிசில வாதங்களை முன் வைத்தார்.

அவை வருமாறு: இந்த கோரிக்கை குறித்து அரசு பரிசீலனை செய்தது. ஜூலைக்குப் பின் பி.எட்.,முடித்தவர்களையும் இத்தேர்வில் அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே,இதுவரை விண்ணப்பிக்காதவர்களும்புதிதாக பி.எட்.படித்தவர்களும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 3ம் தேதி நடக்க இருந்த தகுதித் தேர்வைஅக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றியுள்ளோம். மனுதாரர் விஜயராஜின் கோரிக்கை தொடர்பாகஅமைச்சர் தலைமையில்நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்திபரிந்துரைகளை குழு அளிக்கும். அந்த பரிந்துரைகளை அரசு அமல்படுத்தும். இவ்வாறு அரவிந்த பாண்டியன் வாதிட்டார்.

இதைத் தொடர்ந்துநீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு வருமாறு: இப்பிரச்னையில் அரசு நல்ல முடிவை எடுத்துள்ளது. கடந்த தேர்வில் விண்ணப்பிக்காதவர்களும் இத்தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை அளிக்க அனுமதிக்க வேண்டும். இதுகுறித்துவிளம்பரங்கள் செய்ய வேண்டும். ஏற்கனவே தேர்வில் தோல்வி அடைந்தவர்கள்மீண்டும் தேர்வு எழுத புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் "ஹால் டிக்கெட்'டை அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தேர்வரின் கோரிக்கையை பரிசீலனை செய்துடி.இ.டி.தேர்வுக்குபுதிய தேர்வர்களும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதனால்அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி.மறுதேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. புதிய தேர்வர்களுக்காக, 24ம் தேதி காலை, 10 மணி முதல், 28ம் தேதி மாலை, 5:30 மணி வரைஅனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில்விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஜூலையில் நடந்த டி.இ.டி.தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள்மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது. இவர்களுக்குள்ளதேர்வு மையத்தில்எவ்வித மாற்றமும் கிடையாது. புதியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்துசம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலேயே வழங்க வேண்டும். நேரிடையாகடி.ஆர்.பி.அலுவலகத்திற்கு அனுப்பக் கூடாது.

புதிதாக விண்ணப்பிப்பவர்கள்பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றை நகல் எடுத்துநகலில் முதன்மை கல்வி அலுவலரின் கையெழுத்தை,தேதியுடன் பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த பின்விண்ணப்பத்தில்எவ்வித மாற்றமும் செய்ய முடியாது. ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர்மொழிப் பாடத்தை மாற்ற விரும்பினால், 28ம் தேதிக்குள்டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்கலாம். புதிய தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு, "ஹால் டிக்கெட்அனுப்பப்பட மாட்டாது. டி.ஆர்.பி.இணையதளத்தில் இருந்து, "ஹால் டிக்கெட்'டைபதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு டி.ஆர்.பி.தெரிவித்துள்ளது. பழைய தேர்வர்களுக்குஏற்கனவே டி.ஆர்.பி.இணையதளத்தில், "ஹால் டிக்கெட்'வெளியிடப்பட்டுள்ளது. புதிய தேர்வர்களுக்குஅக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
 


நன்றி...http://www.teachertn.com/2012/09/tn-tet-14.html 

Sunday, September 16, 2012

PAYPAL பற்றிய சில தகவல்கள்...


<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பேபால் என்றால் என்ன?(What is paypal)பேபால் என்றால் என்ன?(What is paypal)

இது ஒரு இணையத்தள வங்கி. இத்தளத்தின் மூலம் பணத்தை எடு க்கலாம். பணத்தை மற்றவர் கண க்குகளில் போடலாம். ஒரு வங்கி க் கணக்கிலிருந்து மற்றொரு வங் கிக் கணக்கிற்கு பணத்தை பரிமா ற்றம் செய்யலாம். இணையதளங் களின் மூலம் வாங்கும் பொருட்க ளுக்குரிய பணத்தை இத்தளத்தின் மூலம் செலுத்தலாம்.

நீங்கள் இணையத்தின் மூலம் ஒரு பொருளை விற்ககூட இந்த கணக்கை நீங்கள் பயன்படுத்திக் கொள் ளலாம். முந்தைய கால Cheque, Demand draft, Money order போ ன்ற முறைகளுக்கு ஒரு மாற்றாக இணையத்தில் அமைந்த ஒரு Digital முறையில் பணப்பட்டுவாடா செய்ய பயன்படும் E-commerce நிறுவ னமே paypal.

Paypal நிறுவனத்தின் தொடக்கம் (beginning of Paypal company):

Paypal நிறுவனம் 2000ம் ஆண் டில்தான் நிறுவபட்டது. இந்நிறு வனம் 2002ம் வருடம் E-Bay நிறுவனத்தின் துணை நிறுவன மாக Subsidiary மாறிற்று. இணைய மோசடிகளை Inter net Frauds தடுக்கும் வகையில் 2008ம் ஆண்டு ப்ராடு சயன்சஸ் என்னும் நிறுவனத்தை தன்னுட ன் இணைத்துக் கொண்டு பலம் பெற்றது. இன்றுவரை பேபால் நிறுவனம் 15 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து 200 க்கும் மேற்பட்ட சந்தைகளில் இணைந்து தன்னுடைய வர்த்தகத்தை தொ டர்ந்து பாதுகாப்பாக செய்து வருகிறது.

200 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைப் பெற்றுள் ளது. Paypal பத்தொன்பதுக்கு ம் மேற்பட்ட currencyயில் கணக்கை வைத்துக்கொள் ளும் வசதியை கொண்டிருக் கிறது. (அதாவது இந்தியாவி ன் rupee, அமெரிக்காவின் dollar போன்று).

ஒரு நாட்டு கரன்சி மதிப்பிலி ருந்து மற்றொரு நாட்டி
கான கரன்சி மதிப்பிற்கு மாற்றி பணத்தை நமது கணக்கில் பணத்தைச் சேர்க்கும் வசதியைப்பெற்றிருப்பதே பேபாலின் முக்கியமான பயனா கும். மிகச் சிறப்பான பாதுகாப்பு வசதியை இது அளிக்கிறது. இந் நிறு வனத்தில் Security key இதற்கு ஒரு சரியான உதாரணம் ஆகும்
விரைவாக, மிக எளிமையாவு ம் பணத்தை இணையத்தளம் வழியாக பணம் பரிவர்த்தனை அல்லது பணப்பரிமாற்றம் செய் வதில் இத்தளம் முதலிடம் வகி க்கிறது. தற்போது சில தளங்க ள் இணைய பணபரிவர்த்தனை வசதிகளைக் கொடுத்தாலும், Paypal நிறுவனத்திற்கு ஈடாக எதுவும் இன்னும் வரவில்லை. துல் லியம், பாதுகாப்பு, பயன்பாட்டில் எளிமை ஆகிய விஷயங்களில் Pay pal-க்கு Paypal தான். இந்நிறுவனம் தனது சேவைக்காக பல்வேறு விருதுகளைப்பெற்றுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த Paypal நிறு வனம் கலிபோர்னியா மாகாணத்தில் அமை ந்துள்ளது.

Paypal மூலம் பணத்தை செ லுத்தும் முறை:

பேபால் மூலம் நீங்கள் பணத் தைச் செலுத்த உங்களிடம் கிர டிட் கார்ட், Internet banking வசதி கொண்ட வங்கிக் கண க்கு, டெபிட் கார்ட்(Debit Card) போன்ற ஏதேனும் ஒன்று இரு க்க வேண்டும். இதன்மூலம் நீங்கள் பேபால் கணக்கில் பணத்தைச் செலுத்த முடியும். சில நாடுகளிலிருந்து வங்கி காசோ லை மூலம் கூட பேபால் மூலம் பணத்தை செலுத்த முடியும்.

Paypal மூலம் பணத்தை பெறும் முறை (Receive money through Paypal system):
Paypal மூலம் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றவும் முடியும். உங்களுக்கு பேபால் வழி யாக உங்கள் வாடிக்கையாளரோ , உறவினரோ, நண்பரோ வெளிநாட் டிலிருந்து பணத்தை பரிமாறிக் கொள்ள முடியும். உங்கள் பேபால் கணக்கில் பணம் சேர்ந்தவுடன் அதை உங்கள் வங்கிக்கணக்கிற்கு மாற்றி நீங்கள் எடுத்துக்கொள்ள லாம்.
இவ்வாறு பண பரிமாற்றம், பண பரிவர்த்தனைகளுக்கு பேபால் நிறு வனம் ஒரு சிறு தொகையை கமிசனாக பெற்றுக்கொள்கிறது.
ஒரு பேபால் கணக்கை துவங்குவது எப்படி? (How to start a PayPal account?)
Paypal Account தொடங்குவது மிக எளிதா ன ஒன்று தான். உங்களிடம் முறையான வங்கிக் கணக்கு ஒன்று இருக்க வேண்டும்.
உங்கள் வங்கிக் கணக்கிற்கான Credit Card, அல்லது Debit Card வைத்திருக்கவேண்டும்
கூடவே இந்திய அரசு வழங்கும் Pan Card-ம் அவசியமாக வைத்தி ருக்க வேண்டும்.
பேபால் கணக்குத்துவங்க Paypal.com என்ற முகவரிக்கு செல்லவும். அதில் signup என்பதை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் பக்கதில் தேவை யான விபரங்களைக் கொடு க்கவும். select your country and region from the list என்பதில் உங்களுடைய நாட்டை தேர்ந்தெடுக்க வும்.
அடுத்து உங்களுக்கு தேவையான கண க்கு முறையைத் தேர்ந்தெடுக்கவும். நீங் கள் இணையத்தில் மூலம் பொருட்க ளை விற்பவர் எனில் business Account -ஐத் தேர்ந்தெடுக்கவும். சாதாரணமாக பண பரிவர்த்தனை மட்டுமே என்றால் personal என்பதைத் தேர்ந்தெடுக்கலாம் .

இணையதளத்தில் வர்த்தகம் செய்ய விரும்பினால்
கட்டாயம் Busines or Permium வகைக் கணக்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பிறகு தேவையான உங்களு டைய தகவல்களை படிவத்தி ல் நிரப்புங்கள். நீங்கள் நிரப் பும் உங்களுடைய சொந்த தகவல்கள் உண்மையாகவும் , வங்கி கணக்கில் உள்ள விப ரங்களுடன் ஒத்துப் போகிற மாதிரியும் இருக்க வேண்டும். இது மிக முக்கியமானதொன் று. குறிப்பாக சொல்வதெனி ல் உங்களுடைய பெயரின் எழுத்துகள்(Name Letters), இனிஷியல் (Initial), தொலைபேசி (cell number, phone number)எண் மற்றும் Email address ஆகியவை மிகச்
சரியாக எழுத்துப் பிழை இல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இணையத்தின் மூலம் அதிக பண பரி வர்த்தனை(Money Exchange), பண பரிமாற்றம் (Money transfer) செய்யு ம் நபர்கள் தங்களுடைய கடன் அட் டை விபரங்களையும் (Credit Card Details) கொடுக்க வேண்டியது கட் டாயம். இத்தளம் மிகச்சிறந்த பாது காப்பை அளிப்பதால் நம்பி விபரங்க ளைக் கொடுக்கலாம்.

அனைத்து விபரங்களையும் கொடு த்த பிறகு உங்களு paypal அக்கவுண்ட் தொடங்குவது உறுதிசெய்வ தற்கான மின்னஞ்சல் வந்த டையும். அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்து உங்கள் கணக்கு விபரங்க ளை நீங்கள் உறுதிப்படுத்தலாம்.

Paypal மூலம் பணம் எடுப்பது எப்படி ?

Paypal மூலம் பணம் எடுக்க முறை யே மூன்று வழிகள் உள்ளன. இது நாட்டிற்கு நாடு மாறுபடும். உங்களு டைய வங்கிக்கணக்கு விபரங்க ளை கொடுத்து, withdraw option தேர்ந்தெடுத்தால் போதும். உங்கள் வங்கிக் கணக்கிற்கு பேபாலிலி ருந்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும்.
ஒரு சில நாடுகளில் cheque, debit card, credit card மூலமாகவும் பணம் எடுப்பதற்கான வசதிகளைக் கொடுத்திருக்கின்றனர். அதிகபட்ச மாக ஐந்து நாட்களுக்குள் இந்த பண ப்பட்டுவாடா முடிந்துவிடும். ஒரு பே பால் கணக்கிலிருந்து மற்றொரு பே பால் கணக்கிற்கும் பணப்பரிவர்த்த னை செய்யமுடியும். personal Paypal Accountமூலம் பணபரிமாற்றம் செய் ய குறைந்த அளவே கமிஷனாக கட் டம் பெறப்படுகிறது.

பேபால் கணக்கின் முக்கிய பயன் கள் (The main benefits of the PayPal account):
பேபால் கணக்கின் மூலம் நீங்கள் இணையத்தின் மூலம் உலகில் எந்த மூலையிலிருந்து, வேண்டிய வருக்கு பணத்தை அனுப்ப முடியு ம். அதோபோல எங்கிருந்தும் பண த்தை நாம் பெற்றுக்கொள்ள முடி யும். இணையதளத்தின் மூலம் நீங்கள் பொருட்களை வாங்கும் போது மிகப் பாதுகாப்பாக உங்கள் பணத்தை இந்த தளத்தின் மூலம் செலுத்த முடியும்.

எப்படி எனப் பார்ப்போம்.

நீங்கள் இணையம் மூலம் பொருட்களை வாங்கும்போது விற்பனை யாளர்களுக்கு(Dealer) நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கைப் பற்றி விபரங்களைக் கொடுக்க வேண்டியதில்லை. credit card number, Bank account number, போன்ற அதி முக்கியத் தகவல்களை விற் பனையாளருக்கோ, அத்தளத்திற்கோ கொடுக்க வேண்டிய அவசிய மேற்படாது. இதனால் உங்கள் தகவல்கள் பாதுகாக்கப்படுகிறது. உங்களுடைய pers onal data பாதுகாக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் money transaction மிகப் பாதுகாப்பாக நடைபெறுகிறது. எனவே எதற்கும் நாம் பயபட வேண்டிய அவசியமி ல்லாமல் போகிற து.

இனி என்ன ? நீங்களும் உங்களுக்கான பே பால் அக்கவுண்ட்டை கிரியேட் செய்து கொள்ள வேண்டியதுதானே?


பேபால் அக்கவுண்ட் கிரியேட்(தொடங்க) செய்ய www.paypal.com செல்லவும்.

நன்றி - தங்கம்பழனி

நன்றி... https://www.facebook.com/photo.php?fbid=478801745492781&set=a.198320656874226.47263.100000888786399&type=1

TET EXAM - என்னதான் கேட்பாங்க கேள்விகளாக... ஒரு முழு அரசாங்க ஆவண விவரம்










Wednesday, September 12, 2012

ரத்து செய்யப்பட்ட Group 2 தேர்வு மீண்டும் வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி

வினாத்தாள் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்ட குருப் 2 தேர்வு தேதி வரும் நவம்பர் மாதம் 4 என தெரிவி்க்கப்பட்டுள்ளது.

Friday, September 7, 2012

PAN CARD ஆப்ளை செய்வது எப்படி?




உங்களின் பான் கார்ட் கரெக்டாக உள்ளதா - திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா? அல்லது தொலைந்து விட்டதா - இல்லை அப்ளை செய்ய வேண்டுமா - 

இதோ சிம்பிள் வழிகள்........

உங்களுக்கு பேன் கார்ட் இருக்கிறது / இல்லை தவறாக இருக்கிறது / இருந்தது ஆனால் இப்போது தொலைந்து விட்டது என்றால் முதலில் உங்கள் முதல் பெயர், கடைசி பெயர், பிறந்த தேதி வைத்து உங்களுடைய கார்ட் அப்டேட் ஸ்ட்டேட்டஸ் முதலில் தெரிந்து கொள்ளுங்கள் இதொ
 அதன் லிங்க்.........https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do

புதிதாக விண்ணபிக்க விரும்புபவர்கள் / திறுத்தம் செய்ய விரும்புவர்கள் இங்கே உள்ள பிடிஎஃப் பாரத்தை டவுன்லோட் செய்து இதை ஏ4 பேப்பரில் நிரப்பி உங்களுடைய புகைப்படத்தோடு இந்த இரு சர்வீஸ் கம்பெனிகளில் ஏதேனும் ஒன்றில் அப்ளை செய்தால் 15 - 21 நாளுக்குள் உங்கள் கார்ட் வீடு தேடி வரும்.

1. NSDL - : https://tin.tin.nsdl.com/pan/form49A.html

2. UTITSL - : http://www.utitsl.co.in/pan

Application Form - :http://www.utiitsl.com/forms/Forms%2049A.pdf

அப்ளை செய்து ஏழு வேலை நாட்களுக்கு பிறகு இந்த லின்க்கில் உங்களுடைய புது கார்ட் ஸ்டேட்டஸ் பற்றி தெரிய வரும்.

https://tin.tin.nsdl.com/pan/changemode.html

http://www.myutiitsl.com/PANONLINE/panTracker.do

அப்ளிகேஷனை ஃபில் செய்யும் முறை -https://tin.tin.nsdl.com/pan/InstructionsCorr.html#instruct_corr



THANKS TO ஆந்தை ரிப்போர்டர்.. https://www.facebook.com/nagravi1 

Monday, September 3, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு - நீங்களும் எழுதுங்கள் உங்கள் பாடக்குறிப்புகளை உலகம் அறிய...


தன்னலம் தான் மனிதனின் முதல் எதிரி...

ஓர் ஆசிரியர் என்பவர் தன்னலம் இன்றி செயல்படுவராக இருக்க வேண்டும்...

ஆசிரியர் தகுதித் தேர்வில் வினாக்களாக வினவப்படலாம் என்று தாங்கள் நினைக்கும் வினா விடைகளை கீழ் காணும் ஒவ்வொரு பதிவுகளிலும் நீங்களே தட்டச்சு செய்து சேமிக்கலாம்...


நீங்கள் நான்... என்று யார் வேண்டுமானாலும் இதனை செய்யலாம்...

விளைவு ... ஒரு முழுமையான புத்தகமாக இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்...

தன்னலம் இன்றி செயல்படுங்கள்... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை...

Sunday, September 2, 2012

TNPSC தேர்வில் புதிய முறை அறிமுகம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்வாணையத் தலைவர்
நட்ராஜ் தெரிவித்தார். 

 
சென்னை சைதாப்பேட்டை ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் நடைபெற்ற நூலகர் தேர்வை நடராஜ் இன்று பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன் லைன் மூலம் கேள்வித்தாள்களை அனுப்பும் முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.

கேள்வித்தாள்களை ஆன்லைன் மூலம் அனுப்பும் முறையால் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என அவர் கூறினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நட்ராஜ் தெரிவித்தார்.