இது ஒரு www.tntet2012.blogspot.com இன் துணை வலைபூ... வீட்டிற்கு செல் எனும் பொத்தானை அழுத்தி Home page க்கு செல்லுங்கள்.. வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்தும் ஒரே குடையின் கீழ்..  

Sunday, September 2, 2012

TNPSC தேர்வில் புதிய முறை அறிமுகம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்வாணையத் தலைவர்
நட்ராஜ் தெரிவித்தார். 

 
சென்னை சைதாப்பேட்டை ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் நடைபெற்ற நூலகர் தேர்வை நடராஜ் இன்று பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன் லைன் மூலம் கேள்வித்தாள்களை அனுப்பும் முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.

கேள்வித்தாள்களை ஆன்லைன் மூலம் அனுப்பும் முறையால் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என அவர் கூறினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நட்ராஜ் தெரிவித்தார்.