இது ஒரு www.tntet2012.blogspot.com இன் துணை வலைபூ... வீட்டிற்கு செல் எனும் பொத்தானை அழுத்தி Home page க்கு செல்லுங்கள்.. வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்தும் ஒரே குடையின் கீழ்..  

Sunday, October 14, 2012

TNTET Supplementary Exam - கை கொடுத்த முதல் தாள் கை நழுவிய இரண்டாம் தாள்... தேர்வு எழுதியோர் ஆதங்கம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2012 - க்கான மறுத் தேர்வு இன்று 14 அக்டோபர் 2012 அன்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பாக நடந்து முடிந்தது.

முதல் தாள் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை வினாக்கள் வினவப்பட்டதாலும் எளிமையான வினாக்களாலும் அருமையாக இருந்தது.


குறைந்தது 50 ஆயிரம் பேராவது முதல் தாளில் தேர்ச்சி அடைந்துவிடுவார்கள் என்று செவிவழி செய்திகள் தெரிவிக்கின்றன.


ஆனால் இரண்டாம் தாள் அறிவியல் மற்றும் கணிதவியலை தேர்ந்தெடுத்தவர்களுக்கு போதாத காலம்  என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாம் தாளில் தமிழ் முழுவதும் கை கொடுக்காத நிலையில் உளவியலும் சற்று கடினமான வினாக்களாகவே அமைந்ததாக இருந்தது.

ஆங்கிலத்தினை பொருத்தவரை சற்று எளிமையாக இருந்தாலும் அறிவியலில் வினவப்பட்ட துறைசார்ந்த நுண் அறிவை சோதிக்கும் விதமான கேள்விகளும் கணிதத்தில் 10 வினாக்களுக்கு மிகவும் கடினமாக இருந்ததும் பெருத்த சலிப்பினையும் தேர்வின் மீது வெறுப்பினையும் தேர்வர்களின் மீது தேர்வு எழுதியவர்களால் ஏற்பட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.