இது ஒரு www.tntet2012.blogspot.com இன் துணை வலைபூ... வீட்டிற்கு செல் எனும் பொத்தானை அழுத்தி Home page க்கு செல்லுங்கள்.. வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்தும் ஒரே குடையின் கீழ்..  

Monday, October 29, 2012

Group 2 - இன்றைய விசாரணை விவரம்.

இன்று ( 29.10.2012 ) மதியம் விசாரணைக்கு வழக்கு வந்த போது நிர்மல் தரப்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிம் மேலும் 2 கேள்விகளுக்கான விடை தவறு என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதற்கு தேர்வாணையம் பதிலளிக்க வசதியாக வரும் புதன்கிழமை ( 31.10.2012 ) அன்று வழக்கை நீதிபதி தள்ளி வைத்துள்ளார். சில கேள்விகள் விபரம்:

1) வோல்ட் மீட்டரின் மிந்தடையின் அளவு அதிகம் ஏன் எனில் ...........
2) 2009-2010 பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது மாநிலமாக உள்ளது? 
3) கீழ்கண்டவற்றில் எது வெளிப்பாட்டுக் கருவி இல்லை?
4) எய்திய - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க. Etc

TNPSC'ன் வாதம் எடுபட வாய்ப்பு உள்ளதாகவும் அதனால் சாதகமாய் தீர்ப்பு வெகு விரைவில் வரலாம் என அனுபவ சாலிகளின் கணிப்பு கூறுகிறது.

COUNSELLING முடித்தவர்கள் மற்றும் NON-INTERVIEW POSTக்காக காத்திருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். கட்டாயம் தீர்ப்பு உங்களுக்குச் சாதகமாகவே அமையும்.

"இன்னும் கொஞ்சம் தாமதம் தான்" என நினைத்துக் கொள்ளுங்களேன்.

Sunday, October 28, 2012

சென்ற TNTET தேர்வில் தேர்ச்சி அடைந்த D.T.Ed ஆசிரியர்களுக்கு பதிவு மூப்பு பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியது


டி.இ.டி., முதல் தாளில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்கள், தற்போதுள்ள நடைமுறை விதிகளின்படி, வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு, தேர்வு செய்யப்பட உள்ளனர். 

 

எனவே, தேர்ச்சி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு பதிவை பதிவு செய்துள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில், இம்மாதம், 31ம் தேதி ஆஜராகி, வேலைவாய்ப்பு பதிவு அட்டையின், சான்றொப்பமிட்ட இரு நகல்களை, சமர்ப்பிக்க வேண்டும். 

 

சான்றிதழ் சரிபார்த்தலுக்காக அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தின் நகலையும், "ஹால் டிக்கெட்' நகலையும், எடுத்துச் செல்ல வேண்டும் என்று டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

 

சென்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்த இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி நியமனம் உறுதி ஆகிவிட்டது.

 

இந்த அக்டோபர் தேர்வில் தேர்ச்சி அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மீதமுள்ள 3500 பணி இடங்களை நிரப்புவதில் போட்டா போட்டி ஏற்படும் என்பது தெரிய வருகிறது.

 

மேலும் இன்னும் ஒரு சில வாரங்களில் அக்டோபர் 14 அன்று நடந்த ஆசிரியர் மறு தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்க படுகிறது.

 

 

Saturday, October 20, 2012

அக்டோபர் 7 அன்று நடத்தப்பட்ட TET answer key TRB ஆல் வெளியிடப்பட்டுள்ளது அது உங்களுக்காக single pdf format ல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது


SMS " ON tntet2012 " to 9870807070 புதிதாக உங்களுக்கான சேவை...

இந்த வலைபூ வேலைவாய்ப்பிற்கான ஒரு ஒருங்கிணைப்பு தளமாக செயல்பட்டுவருவதை நீங்கள் அறிவீர்கள்...

உங்கள் அலைபேசியில் இந்த தளத்தின் புது புது வெளியீடுகளை உடனுக்குடன் குறுந்தகவலாக பெற மற்றும் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற தற்போது தொடங்கப்பட்டுள்ளதே GOOGLE SMS சேவை

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்


உங்கள் மொபைலில் இருந்து " ON tntet2012 "  என்று 9870807070 என்ற எண்ணிற்கு ஒரு sms அனுப்புங்கள் பிறகு பெறுங்கள் உடனுக்குடனான குறுந்தகவல் சேவையை அதுவும் தினமும் இலவசமாக...

 தினமும் புதுப்புது செய்திகளும் உங்களுக்கு தேவையான தகவல்களும் இதில் இடம் பெறுவதாக நீங்கள் நினைப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

மிகக் குறைந்த காலத்திலேயே 3 மாதத்திலேயே... 60 ஆயிரம் பார்வையாளர்களை வெற்றிகரமாக இந்த தளம் பெற்றுள்ளது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

புதுமை - எளிமை - தனித்துவம் என்பதே இந்த தளத்தின் குறிக்கோள்

இனி வரும் காலங்களில் நீங்கள் பெரிதும் கவலைப்படும் இந்த தளத்தின் மின்னியல் புத்தகங்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யும் சேவை தொடங்கப்படும்


Wednesday, October 17, 2012

IBPS - வங்கி பணிக்கான பொது நுழைவுத் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 5


வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டம் - 9 ஆம் வகுப்பு தவறியவர்களுக்கும் வழங்க அரசு அனுமதி படிவம் பதிவிறக்கம் இங்கே

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இன்னும் வேலை கிடைக்காதவர்களுக்கு மாதம் அவர்களின் கல்வித் தகுதிக் கென குறிப்பிட்ட தொகையை உதவித் தொகையாக வழங்கி வருகிறது தமிழக அரசு.


தங்களின் செல்போனை ரீச்சார்ஐ் செய்யவாவது இந்த தொகை போதும் என்றுதான் பல மாணவர்களும் பட்டதாரிகளும் இந்த திட்டத்தில் தங்களை பதிந்து கொள்கின்றனர்.

பத்தாம் வகுப்பு பாஸ் தான் இதற்கான அடிப்படை கல்வித்தகுதியாக இருந்தது... இன்று செப்டம்பர் 17 - 2012 அன்று இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற 9 ஆம் வகுப்பு தேர்ச்சியே அடிப்படை தகுதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது..

முழுமையான விவரத்தினையும்... அதற்கான படிவத்தினையும் தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..


http://employmentexchange.tn.gov.in/Empower/pdf/Forms/FORM_4.pdf 

ரயில்வேயில் பல்வேறு மருத்துவ பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 12



 இந்திய ரயில்வேயில் மருத்துவத்துறையில்  பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..


விண்ணப்பங்களை தாங்கள் எழுத விரும்பும் பணிக்கான தேர்வு கட்டணங்கள் செலுத்தப்பட்ட அஞ்சலக பற்று சீட்டு அல்லது DD உடன் வழக்கமான முறையில் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்...

முழு தகவலை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

http://www.rrbthiruvananthapuram.net/(S(qtdhl32pox1ysxa3i5pzzjnz))/Admin/NotificationFiles/CEN05_2012-PARAMEDICALCATEGORIES.pdf

Tuesday, October 16, 2012

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 18ஆயிரத்து 932 பணியிடங்களும் நிரப்பப்படுவதில் சிக்கல் - புதிய வியூகத்தினை கையாள போகும் TRB...


ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக, 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும், 18 ஆயிரத்து 932 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. முந்தைய தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேருக்கான இடங்களைத் தவிர்த்து, மீதமுள்ள, 22 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு, இத்தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் நியமிக்கப்படுவர் என்று ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

 

இதில் தற்போது நடந்து முடிந்த அக்டோபர் TET தேர்வினில் முதல் தாளில் வினாக்கள் மிகவும் எளிமையாக அமைந்ததால் குறைந்தது 50,000 பேர் வரை தேர்ச்சி அடைவார்கள் என்று தெரிகிறது.

 

ஆனால் இந்த தேர்வில் முதல் தாளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி நியமனம் Seniority அடிப்படையில் நிரப்பப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதிப்பெண்ணும் கருத்தில் கொள்ளப்படும் என்ற இருநிலையான அறிவிப்புகள் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது.

 

இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனத்தில் Seniority பிரட்சனை என்றால்... பட்டதாரி ஆசிரியர் தேர்வில் சமூக அறிவியல் பாடம் தவிர்த்த மற்ற பாடங்களில் வினவப்பட்ட வினாக்கள் மிகவும் கடினமாகவே இருந்தன...

 

இது சென்ற சூலை மாதம் நடந்த TET தேர்வினை விட கடினமானது என்றே தேர்வர்களால் பாவிக்கப்பட்டது .

 

இந்த சூழலில் தேவையான 18,932 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் அளவு ஆசிரியர்கள் தேர்வாகாத சூழலில் 5 சதவிகித மதிப்பெண்ணை குறைத்து .. அதாவது தேர்ச்சி மதிப்பெண்ணை 82.5 சதவிகிதமாக குறைத்து மேற்கொள்ள TRB முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

 

 

சென்ற தேர்விலேயே 750 பேர்தான் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தேர்வானார்கள்... அதை விட கடினமான வினா வினவப்பட்ட இந்த தேர்வில் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைபவர்கள் எண்ணிக்கை 2000 ஐ தாண்டாது என்றுதான் தோன்றுகிறது.

 

 

மீண்டும் மறுத் தேர்வு நடத்த TRB ஆல் முடியாது என்பதாலும் அறிவிக்கப்பட்ட பணி நியமனத்தினை வழங்க ஆவண உடனடியாக செய்ய வேண்டும் என்பதாலும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வாணையம் சில நெகிழ்வு சுளிவுகளை மேற்கொண்டாகும் என்பது இதன் மூலம் உறுதி...

 

 

எது எப்படியே... இந்த முறை அறிவிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்பியே ஆக வேண்டும் என்பது ஆசிரியர் தேர்வாணையத்தின் விதி... 

 

 

  

TRB ஆல் வெளியிடப்பட்டுள்ள அக்டோபர் TNTET 2012 விடைகள் இங்கே...

Sunday, October 14, 2012

TNTET Supplementary Exam - கை கொடுத்த முதல் தாள் கை நழுவிய இரண்டாம் தாள்... தேர்வு எழுதியோர் ஆதங்கம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2012 - க்கான மறுத் தேர்வு இன்று 14 அக்டோபர் 2012 அன்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பாக நடந்து முடிந்தது.

முதல் தாள் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை வினாக்கள் வினவப்பட்டதாலும் எளிமையான வினாக்களாலும் அருமையாக இருந்தது.


குறைந்தது 50 ஆயிரம் பேராவது முதல் தாளில் தேர்ச்சி அடைந்துவிடுவார்கள் என்று செவிவழி செய்திகள் தெரிவிக்கின்றன.


ஆனால் இரண்டாம் தாள் அறிவியல் மற்றும் கணிதவியலை தேர்ந்தெடுத்தவர்களுக்கு போதாத காலம்  என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாம் தாளில் தமிழ் முழுவதும் கை கொடுக்காத நிலையில் உளவியலும் சற்று கடினமான வினாக்களாகவே அமைந்ததாக இருந்தது.

ஆங்கிலத்தினை பொருத்தவரை சற்று எளிமையாக இருந்தாலும் அறிவியலில் வினவப்பட்ட துறைசார்ந்த நுண் அறிவை சோதிக்கும் விதமான கேள்விகளும் கணிதத்தில் 10 வினாக்களுக்கு மிகவும் கடினமாக இருந்ததும் பெருத்த சலிப்பினையும் தேர்வின் மீது வெறுப்பினையும் தேர்வர்களின் மீது தேர்வு எழுதியவர்களால் ஏற்பட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

Wednesday, October 10, 2012

TET - Hallticket கிடைக்க பெறாதவர்கள் செய்ய வேண்டியது என்ன?

வரும் அக்டோபர் 14 ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.

அதற்கான நுழைவு சீட்டு பழைய விண்ணப்பதார்களுக்கு வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதிய விண்ணப்பதார்களும்... தங்களுக்கு நுழைவுச்சீட்டு கிடைக்க பெறாத பழைய விண்ணப்பதார்களும் செய்ய வேண்டியது இதுதான்

கீழே உங்களின் நிலைக்கேற்ப லிங்குகளை கிளிக் செய்யுங்கள்..

 பழைய விண்ணப்பதார்கள் இங்கே சொடுக்கவும்...

புதிய விண்ணப்பதாரர்கள் இங்கே சொடுக்கவும்

பின்னர் தங்களின் பழைய தேர்வு எண்ணையோ... புதிதாக விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணையோ கொண்டு தங்களின் புதிய தேர்வு எண் மற்றும் தேர்விற்கான இடம் நேரம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்ய ctrl+P அழுத்தி A4 தாளில் print out எடுத்துக் கொள்ளவும்..

பிறகு வலது மூலையில் தங்களின் ஒரு புகைப்படத்தினை ஒட்டி அதில் gazetted officer ஒருவரிடம் புகைப்படத்தினை ஒட்டியவாறு கையொப்பம் பெற்றுக்கொள்ளவும்..

தேர்வு நாளன்று கையோடு இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தினையும் இந்த Hallticket ஐயும் உடன் தங்களின் அடையான அட்டை ஒன்றிணையும் எடுத்துச் செல்லவும்... அவ்வளவுதான்..


அடையாள அட்டைக்காக குடும்ப அட்டை யை தவிர்த்து தனிநபர் அடையாள அட்டைகளை எடுத்துச் செல்லவும்...

நன்றாக தேர்வு எழுத வாழ்த்துக்கள்..

இப்படிக்கு உங்களில் ஒருவனாக Jaganathan. R   

Monday, October 8, 2012

ஆசிரியர் பணி நியமனத்தில் புதிய முறை அறிமுகம் - மார்க் வெயிட்டேஐ் முறையில் பணி நியமனம் செய்யப்படும்


GROUP 4 தேர்வு முடிவுகள் வெளியீடு - நான் தேர்வாகிவிட்டேன்...

http://www.tnpsc.gov.in/results/grp42012_seldoc.pdf



கடந்த சூலை மாதம் 7 ஆம் தேதி நடந்த group 4 தேர்வில் டைப்பிங் பிரிவில் 128/200 பெற்று நான் தட்டச்சர் பணிக்கு தேர்வாகி உள்ளேன்.

இதனை இந்த தளத்தின் பார்வையாளர்களாக உள்ள தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

எனது இந்த வெற்றி என் 3 வருட உழைப்பிற்கு கிட்டிய பலன் என்றுதான் சொல்ல வேண்டும்.

மனம் போல் மார்கம் என்பது இதன் மூலம் நான் அறிந்து கொண்டேன்..

Saturday, October 6, 2012

PG TRB மறு மதிப்பீட்டீற்கான முழு சட்ட அறிக்கை


TET + TNPSC மின்னியல் புத்தகங்கள் இலவசம்



இலவசம்...இலவசம்... இலவசம்... மின்னியல் புத்தகங்களை இந்த தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய கட்டணம் ஏதும் இல்லை..5 நொடிகள் காத்திருந்தாலே போதும்...இதில் இடம் பெறும் விளம்பர பக்கம் ஒரு சோதனைக்காகவே இணைக்கப்பட்டுள்ளது ... தவறாக நினைக்க வேண்டாம்...
அக்டோபர் 3 ஆம் தேதி TET மறுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது... மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை... தேர்வு நேரம் ஒன்னறை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது...இந்ததளத்தில் கிடைக்கும் மின்னியல் புத்தகங்களையும் பயன்படுத்தி தயாராகுங்கள்... பாடபுத்தகங்களை முழுவதுமாக படியுங்கள் வெற்றி நிச்சயம்...


மின்னியல் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்குகளை சொடுக்கவும் >>>> அது உங்களை அழைத்து செல்லும் வலைபக்கத்திற்கு சென்று 5 விநாடிகள் காத்திருந்து skip add என்பதை சொடுக்கவும் >>>> பிறகு அது அழைத்து செல்லும் புத்தக களஞ்சிய பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் புத்தகத்தினை பார்வையிட்டு facebook log-in செய்வதன் மூலமாக புத்தகங்களை எளிமையாக download செய்துக் கொள்ளலாம்...

ஆன்லைனில் வருமானம் பெறுவது எப்படி?

கட்டணம் ஏதேனும் கேட்டால் உங்கள் கணினியில் உள்ள ஒரு file ( கோப்பினை ) பதிவேற்றம் செய்வதன் மூலமாக Scribd தளத்தின் உறுப்பினராக பின் இந்த புத்தகங்களை கட்டணம் இன்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த புத்தகங்களை பதிவிறக்கம் செய்வதில் தாங்கள் ஏதேனும் பிரட்சனையினை உணர்ந்தால் கிழ் காணும் லிங்கினை கிளிக் செய்து முழு விவரத்தினையும்... உதவியினையும் அடையுங்கள்..


இந்த புத்தகங்களை எளிமையாக பதிவிறக்கம் செய்வது எப்படி என்ற உதவிக்கு இங்கே கிளிக் செய்யவும்..


 ஒரு முழு புத்தகம்

புதிய தலைமுறைக் கல்வி

 பொதுவான புத்தகங்கள்

 அறிவியல் பாடக்குறிப்புகள் முழுமையும்

  சமச்சீர் கல்வி பழைய பாட புத்தகங்கள் ( முழு பாட புத்தகங்கள் ) Pulpit rock

குழந்தை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு உளவியல் பாடக்குறிப்புகள்

 Govt Model Question Paper with answer

 கணிதம் பாடக்குறிப்புகள் களஞ்சியம்

 ஆங்கிலம் பாடக்குறிப்புகள் களஞ்சியம்

 தமிழ் பாடக்குறிப்புகள் முழுமையும்

  தமிழ் மின்னியல் புத்தகங்கள்... Pulpit rock

தமிழ் இலக்கணம்... Pulpit rock

ஆங்கில இலக்கணத்தினை தமிழில் கற்க சிறந்த மின்னில் புத்தகம்...புதிது Pulpit rock
தமிழ்நாடு பாடநூல்கள் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை Pulpit rock

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வினா விடைகள் Pulpit rock

தினகரனில் வெளியான பதிவுகள் முழுமையும்

  டி.என்.பி.எஸ்.சி சார்ந்த கற்றல் கட்டுகள்

 குடிமையியல் mp3 பதிப்பு

 தமிழ் நூல்களும் அதன் ஆசிரியர்களும் mp3 பதிப்பு

 அறிவியல் mp3 பதிப்பு

  தமிழ் mp3 பதிப்பு

 மேலும் மின்னியல் புத்தகங்களை சுருங்கிய வடிவில் பெற என்னை https://www.facebook.com/jackn.nath எனும் இந்த முகபுத்தக பக்கத்தில் தொடர்பு கொள்ளவும். மேலும் என் மின் அஞ்சல் முகவரி jagan.nathan801@gmail.com Open a popup window Guestbook

Friday, October 5, 2012

பத்தாம் வகுப்பு தவறியவர்களுக்கு தட்கல் முறையில் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 8


அகவிலைப்படி 7 சதவிகிதம் உயர்வு - தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி




கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவிகிதம் உயர்த்தி வழங்க வெளியான தகவலை தொடர்ந்து மாநில அரசும் தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை அறிவித்துக்ளது.

இதன்படி, 



தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள்  ‌பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை 1-ம் (1.7.2012)தேதி முதல் கணக்கீட்டு ரொக்கமாக வழங்கப்படும். 

இந்த அகவிலைப்படி உயர்வினால் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பன்பெறுவர்.

 இதன் மூலம் அரசுக்கு ரூ. 1,443. 52 கோடி செலவாகும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...  

Thursday, October 4, 2012

B.Ed மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகள் வெளியீடு


TNPSC GROUP 4 தேர்வு முடிவுகளில் விரைவில் வெளியாகின்றன...

Group 4 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஏற்பட்டிருந்த நீதிமன்ற சிக்கல்களும் - இடைக்கால தடையும் நீக்கப்பட்டு விட்டதால்...

Group 4 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட TNPSC வட்டாரம் முடிவு செய்துள்ளது.

ஓரிரு நாட்களில் முடிவுகளை எதிர்பார்க்கலாம். 

Wednesday, October 3, 2012

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் சிக்கல் - மறு மதிப்பெண் பட்டியல் தயாரிக்க நீதிமன்றம் உத்திரவு.


ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ள, தேர்வு பெற்றவர் பட்டியலும், இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது. புதிய மதிப்பெண் பட்டியலோடு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை, மூன்று வாரத்திற்குள் வெளியிட வேண்டும் என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், 2,395 முதுகலை ஆசிரியர் பட்டதாரி பணியிடங்களை நிரப்ப, பிப்ரவரி, 28ம் தேதி, அறிவிப்பு வெளியிட்டது. இத்தேர்வில், முதன்மை பாடம், கல்வி முறை மற்றும் பொது அறிவு ஆகியவற்றில் இருந்து, 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில், கொள்குறி வினாக்களுக்கு, கொடுக்கப்பட்ட பதில், முற்றிலும் தவறாக இடம் பெற்றது. தேர்வாணையம் வெளியிட்ட, தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில், தேர்விலேயே முதல் மதிப்பெண் பெற்றவர்களை, பொதுப்பிரிவில் சேர்க்காமல், அவர்களின் சாதி அடிப்படையிலான பிரிவில் சேர்த்துள்ளனர். இதனால், இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாதது தெரியவந்தது. இதையடுத்து, தேர்வு எழுதியவர்களில் சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி நாகமுத்து அளித்த தீர்ப்பு: பொதுப் பிரிவுக்கான தேர்வு முடிவுகளை, வாரியம் முறையாக பின்பற்றவில்லை. கேள்வித்தாளில் இடம் பெற்ற, வினாக்களுக்கான பதில், முற்றிலும் தவறானதாக இருந்ததால், மாணவர்கள் மதிப்பெண் பெறுவதும் தடைபட்டு உள்ளது. எனவே, தேர்வாணையத்தின் தேர்வு பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. மூன்று வாரத்திற்குள், புதிய மதிப்பெண் பட்டியலோடு, தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த விவரங்களை, தேர்வாணையம் வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான, "கீ ஆன்சர்' தவறு என்று, ஐகோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் குறித்து, மறு மதிப்பீடு செய்து, பிரச்னைக்குரிய விடைகளை இறுதி செய்து, இணையதளத்தில் வெளியிடப்படும். ஏற்கனவே ஒரு பணியிடத்திற்கு ஒருவர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும். இதற்கு அழைக்கப்படுபவரின் பட்டியலும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியிடங்கள் - கடைசிநாள் அக்டோபர் 10